• Apr 25 2024

தோனியைத் தொடர்ந்து சினிமாவில் கால் பதித்த மற்றுமோர் கிரிக்கெட் வீரர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொழிலதிபர்கள், சாதாரண மக்கள் மட்டுமன்றி தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலரும் சினிமாவில் கால்பதித்து வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமானார்கள்.


இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி, சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அத்தோடு தமிழில் தனது முதல் படத்தையும் அதன் மூலமாக தற்போது தயாரிக்கத் தொடங்கி உள்ளார். அந்தவகையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவனா நடிக்கும் 'எல்.ஜி.எம்' என்ற படத்தினைத் தயாரித்து வருகின்றது.


இந்நிலையில் தோனியைத் தொடர்ந்து தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவும் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாது அந்நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்துக்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.


அந்தவகையில் இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு பச்சாதர் கா சோரா (Pachhattar Ka Chhora) என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா நடிப்பதோடு அவருக்கு ஜோடியாக நீனா குப்தா நடிக்கவுள்ளார். 

இவ்வாறாக கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சினிமாவில் குதிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரின் இந்த முயற்சிக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement