• Apr 20 2024

ECR-ல் பங்களா வாங்கியபின் அந்த உண்மையை உளறிய நடிகை பிரியா பவானி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது வெள்ளத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் இறுதியாக அருண் விஜய் இயக்கத்தில் வெளியான யானை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்தப் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா,யானை, பொம்மை, ஓ மைக் பெண்ணே, ஹாஸ்டல் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்


இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ECR பகுதியில் ஒரு பங்களாவை கட்டிமுடித்து காதலருடன் குடியேறினார்.

இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்...“தமிழில் நடிக்க வந்தபோது எதிர்காலம் பற்றிய ஒரு திட்டம் எதுவும் இல்லாமல், ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்று கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என நினைத்து தான் நடிக்க வந்தேன்” என்று உண்மையை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement