• Apr 25 2024

திடீரென விஷம் அருந்திய ஆதிரை....பரபரப்பின் உச்சத்தில் வெளியான எதிர்நீச்சல் ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது தொடர்ந்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த சீரியலில் இயக்குநராக திருச்செல்வம் இருந்து வருகிறார். மேலும் சீரியலின் கதை ஆசிரியராகவும் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் நடிகை ஸ்ரீ வித்யா இருந்து வருகிறார். அத்தோடு ஒளிப்பதிவாளராக சந்தானம் இருந்து வருகிறார்.

விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலில் ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது.அதில் ஆதிரை ...தனது காதலை ஏற்க மறுத்த தனது அண்ணன்களுக்கு எதிராக விஷம் குடித்து விடுகின்றார்.இதனால் பதறியடித்துவைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றார்கள் குடும்பத்தினர்.



இவ்வாறுஇருக்கையில் ஜனனி போன் செய்து ஆதிரையை ஹாஸ்பிட்டலில் அட்மின் பண்ணியிருக்கின்றோம் எனக் கூறியதும் காதலனும் மூத்த அண்ணனின் மனைவியும்அதிர்ச்சியடைகின்றனர்.



பின்னர் ஆதிரைக்கு பேசிய மாமா பையனும் தாயும் வந்து பதறி அடிப்பது போல நடித்து தமது பிளான் சொதப்பப்போகின்றதே என கவலை அடைகின்றனர்.


இவ்வாறாக பரபரப்பின் உச்சத்திலே இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.இதனை அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.










Advertisement

Advertisement

Advertisement