தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவர் தமிழில் விஜய் அஜித் கமல் விக்ரம் சூர்யா விஷால் எனப் பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
மேலும் இவர் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் இவருடன் கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் விக்ரம் ஆகியோரும் நடித்திருந்தனர். இதில் த்ரிஷா குந்தவி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஐரோப்பா சுற்றுப்பயணம் செய்துள்ள த்ரிஷா, தன் சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இத்தாலி நாட்டின் பீசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், அதன் அருகே நின்று த்ரிஷா எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.
Listen News!