• Apr 20 2024

'செருப்பால் அடிப்பேன்'- பொது வெளியில் ரசிகரைத் தாறுமாறாக திட்டிய நடிகை.. குவியும் கண்டனங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனசுயா பரத்வாஜ். மேலும் புஷ்பா மற்றும் ரங்கஸ்தலம் படங்களின் வாயிலாக பெருமளவில் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் சுசாங்க் பரத்வாஜ் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.  


இதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் தனது கணவர் பரத்வாஜூடன் எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து உங்களுடனான வாழ்க்கை மிகவும் வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரி என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.


இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அனசுயாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஒரே ஒரு நெட்டிசன் மட்டும், அனுசுயா சுசாங்க் பரத்வாஜை பணத்திற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இருப்பினும் இந்த கமெண்டை பல நெட்டிசன்கள் லைக் செய்திருந்தனர். 

ஆனால் இந்த கமெண்டை பார்த்து கடுப்பான அனசுயா, என்னடா தம்பி இப்படி சொல்லிவிட்டய்? அவரிடம்தான் பணம் இருக்கிறதா? என்னிடம் இல்லையா என்ன என்று தாறுமாறாக கேள்வி எழுப்பியதோடு கன்னத்தில் போட்டுக்கொள்.. இல்லையென்றால் செருப்பால் உன் கன்னத்தில் நான் அடிப்பேன் என்று அந்த நெட்டிசனை எச்சரித்தார்.


இதனை பார்த்த மேலும் சில நெட்டிசன்கள், உண்மையை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறதா என சீண்டினர். இதனால் மேலும் அதைப்பார்த்து கொந்தளித்த அனுசுயா எல்லாம் தெரிந்தது போல பேசதீங்க. மஞ்சள் காமாலை வந்தவர் கண்ணுக்கு உலகமெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியுமாம். உங்களின் புத்தி பணத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்காது. தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார்.


இதனையடுத்து அனசுயாவின் பதிவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. என்னதான் இருந்தாலும் பொது வெளியில் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர். இப்படி பேசுவதால் உங்களின் மரியாதையை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் லைக் செய்ய வேண்டும் புகழ வேண்டும். ஆனால் எங்களுக்கு தோன்றும் கருத்தை நாங்கள் சொல்லக்கூடாதா" என்று மீண்டும் கேட்டு வருகின்றனர்.


அதேநேரத்தில் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு பதில் சொல்வது மலத்தின் மீது கல் எறிவதற்கு சமம் என்றும்  பலர் அனசுயாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் "தாயான பிறகும் வேலை செய்ய பெண்கள் படும் சிரமங்களை உணரக்கூடியவர்கள் பெண்களைப் பற்றி வீண் பேச்சு பேசுவதில்லை. எனவே, தகுதியில்லாத பதிலைச் சொல்லி உங்கள் மன அமைதியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் மதிப்பைக் குறைக்காதீர்கள்" என்றும் வேறு சிலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement