• Mar 28 2024

தீபத்திருநாளை மங்களகரமாக கொண்டாடிய நடிகை ரித்திகா- ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. அதிலும் அதிக டி.ஆர்.பி-யை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில்... ஒவ்வொரு சீசனுக்கு கலந்து கொண்டு விளையாடும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் மிகவும் எளிதில் இடம் பிடித்து வருகின்றனர். எனவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ரித்திகா. இவர் இதற்கு முதல் ராஜா ராணி சீரியலில் நடித்திருக்கின்றார்.


இது தவிர பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இவருடைய திருமணம் சமீபத்தில் மிகவும் எளிமையான முறையில் கோவிலில் நடந்த நிலையில், அதன் பின்னர் திருமண வரவேற்பு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில், விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


இந்த நிலையில் நாளைய தினம் கார்த்திகை தீபத்திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடவுள்ள நிலையில் ரித்திகா தனது வீட்டில் தீப ஒளியை ஏற்றி வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement