• Apr 20 2024

செலிபிரிட்டி கிரிக்கெட் டீமில் மீண்டும் இணைந்த நடிகர் விஷ்ணு விஷால்- சென்னை அணியில் இவ்ளோ பாலிடிக்ஸ் இருக்கா ?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களிடையே இரு விஷயங்கள் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கும். ஒன்று கிரிக்கெட் மற்றொன்று சினிமா. இந்த இரண்டிற்கும் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகின்றது. இவ்வாறு இருக்கையில் கிரிக்கெட் மற்றும் சினிமா இரண்டும் கைசேர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு நிகழ்வு தான் CCl ( செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ).

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகின்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பல மொழியை சேர்ந்த நட்சத்திரங்கள் விளையாடும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள்.


ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இந்த போட்டியில் மிக முக்கியமான அணியாக திகழ்வது தமிழை சேர்ந்த சென்னை ரைனோஸ் அணி தான். இரண்டு முறை இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற சென்னை ரைனோஸ் அணி கடந்த சில வருடங்களாக CCl போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தது.

இதன் காரணமாக தமிழ் சினிமா ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னை ரைனோஸ் அணி CCL போட்டிகளில் ஏன் பங்கேற்கவில்லை என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது சென்னை ரைனோஸ் அணியில் முன்னணி நட்சத்திரங்களான ஜீவா, ஆர்யா, விஷால் என பலர் விளையாடி வருகின்றனர். ஆனாலும் இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் தான் மிக முக்கியமான வீரர்கள். இவர்களால் பல போட்டிகளை சென்னை அணி வென்றுள்ளது.

அவ்வாறு இருக்கையில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருக்கும் மற்ற சில வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் CCL போட்டிகளிலிருந்து இருவரும் விலகினார். இவர்கள் விலகினாலும் சென்னை ரைனோஸ் அணி CCL போட்டிகளில் பங்கேற்றது. இருப்பினும் இரண்டு நட்சத்திர வீரர்கள் சென்னை அணியிலிருந்து விலகியதால் அந்த அணியால் முன்பு போல போட்டிகளில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை சந்தித்தது.


இதன் காரணமாக சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக CCL போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தது. இந்நிலையில் CCL போட்டியை நடத்தும் முக்கிய பிரபலம் ஒருவர் சென்னை அணியை வாங்கியுள்ளார். அவரிடம் நேரடியாக சென்று விஷ்ணு விஷால் அணியில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார்.

சென்னை அணி வெற்றிபெற விஷ்ணு விஷால் மிகமுக்கியமான வீரர் என்பதால் அவரின் பேச்சை கேட்டு அணியில் சில மாற்றங்களை செய்து தற்போது சென்னை அணியை களமிறக்கியுள்ளார் அந்த பிரபலம். எனவே தான் தற்போது பல வருடங்களுக்கு பிறகு சென்னை அணி ccl போட்டிகளில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement