• Apr 19 2024

நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்-திடீரென எழுந்த சர்ச்சை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்.இவர்  தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் ரிலீஸுக்கு தயாராகும் நிலையில் சமீபத்தில் அவரது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை சந்தித்தார்.

அப்போது விஜய் தனது வீட்டில் இருந்து காரில் வந்து இறங்கி ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

எனினும் தற்போது விஜய் வந்த காரில் விதிகளை மீறி கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டு இருந்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து போலீசார் விஜய்க்கு 500 ருபாய் அபராதம் விதித்து  உள்ளார்கள்.

மேலும் அது மட்டுமின்றி வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் விதிகளை மீறி யானை பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக வனத்துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இதனால் வாரிசு படத்திற்கு அடுத்து இன்னொரு சர்ச்சை காத்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது

Advertisement

Advertisement

Advertisement