• Apr 20 2024

விமான பயணத்தின் போது நடிகர் சூர்யா செய்த செயல்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆனவர் சூர்யா. இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்த ஃப்ரெண்ட்ஸ், நந்தா, காக்க காக்க, பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்கள், அவரது நடிப்பின் பல பரிணாமங்களை திரையில் காண்பித்து ஏராளாமான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கவும் வழி செய்திருந்தது.

மேலும் இப்படி ஏராளமான வித்தியசமான கதைக் களங்களை கொண்ட படங்களை நடித்து வந்த சூர்யாவின் நடிப்பில், கடந்த சில ஆண்டுகளில் வெளியாகி இருந்த சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தன. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் சூர்யாவுக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டிருந்தது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த 'விக்ரம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.எனினும் சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே சூர்யா தோன்றி இருந்தாலும், ரோலெக்ஸ் எனும் கதாப்பாத்திரத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பு, மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. 

இதற்கு அடுத்தபடியாக, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதிலும் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகின்றார். அதேவேளையில் தனது அகரம் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.


எனனும் இந்த சூழ்நிலையில், நடிகர் சூர்யா அண்மையில் விமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு அருகே அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் சூர்யாவை கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த தருணத்தை ஒரு வீடியோவாக பதிவு செய்ய நினைத்திருக்கிறார் அந்த ரசிகர். அப்போது, சூர்யாவிடம் தயங்கி தயங்கி வீடியோ எடுத்துக்கொள்ளட்டுமா? என அந்த ரசிகர் கேட்டிருக்கிறார். 


அதற்கு உடனே சம்மதம் தெரிவித்த சூர்யா, அந்த வீடியோவிலும் சில வார்த்தைகள் பேசுகிறார். ஆனால், விமான இயக்கம் காரணமாக அவர் பேசும் ஒலி தெளிவாக பதிவாகவில்லை. இவ்வாறுஇருக்கையில்  இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் தீயாய் பரவி வருகின்றது


Advertisement

Advertisement

Advertisement