• Apr 24 2024

தனது அம்மாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மிக கவலையுடன் பதிவு ஒன்றை பதிவு செய்த நடிகர் சரத் ​​குமார்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவரும் ஆவார்.


அதுமட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர் சரத்குமார் அதன் பின் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். மேலும் அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். 


தற்போது இவர் விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் அனைவரும் காண ஆவலுடன் காத்திருந்த பொன்னியின் செல்வன் படத்திலும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் அம்மாவின் நினைவு நாள் இன்று. அதை ஞாபகப்படுத்தும் முகமாக தனது இன்ஸ்டாகிராமில் தனது அம்மாவின் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement