• Apr 20 2024

ரஜினியின் 169 படம் குறித்து நடிகர் ரெடின் கிங்ஸ்லி வெளியிட்ட தகவல் ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜனிகாந்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்த.இந்தப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவன தாயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹிட்டடித்தது. இதையடுத்து அவர் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.

எனினும் தற்போதைக்கு தலைவர் 169 என்று அழைக்கப்படும் அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். அவரின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் அதிகமாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால், தலைவர் 169 பட கதையில் நெல்சன் அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்லப் படுகிறது.

இதனிடையே அப்படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை தொடர்ந்து அப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மக்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஒரு பேட்டியில், 169வது படத்தின் முதல் பாதியை இப்போது தான் எழுதி முடித்துள்ளார் நெல்சன், விரைவில் முழு படத்தையும் முடித்துவிடுவார்.

அதற்கான வேலையில் தான் இப்போது முழு மூச்சில் இறங்கியுள்ளார். செம வெறியில் உள்ளார், கண்டிப்பாக அடிச்சு தூக்குவார் என கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement