• Apr 19 2024

அஜித்- ஷாலினி திருமணம் தள்ளிப்போனதற்கு நடிகர் பிரசாந்த் தான் காரணம்- அதிர்த்திச் தகவலை வெளியிட்ட பிரபல இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் இவர் நடிகை ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்களின் திருமணம் குறித்து சுவாரஸியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சரண் இயக்கத்தில் அஜித் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்த 'அமர்க்களம்' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.இந்தப்படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் அஜித், ஷாலினி திருமணத்தில் நடந்த தொடர் பிரச்சனைகள் குறித்து இயக்குநர் பேரரசு தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது திருமணத்திற்கு பிறகு ஷாலினி இனி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து இருந்தாராம் . ஆனால் அப்போது ஒப்பந்தமாகி இருந்த பிரியாத வரம் வேண்டும் படத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடிக்க வேண்டிய காட்சிகள் பேலன்ஸ் இருந்ததாம். அப்போது நடிகர் பிரசாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததுள்ளது.

பிரியாத வரம் வேண்டும் படத்தில் இருந்த மூன்று நாள் காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவில் இருந்த ஷாலினி ஜனவரி மாதம் திருமணம் வைக்க இருந்து அதன் பிறகு 3 முறை தொடர்ந்து தேதிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பொறுமை இழந்தவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு படப்பிடிப்பை சீக்கிரம் நடத்தி முடிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டடுள்ளது. ஜனவரியில் திருமணம் செய்ய இருந்த ஷாலினி 'பிரியாத வரம் வேண்டும்' படத்தால் ஏப்ரல் மாதம் தான் அஜித்தை திருமணம் செய்து கொண்டார் எனக் கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes
  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement