• Apr 25 2024

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மயில்சாமி- பிரேத பரிசோதனை செய்யாததற்கான காரணம் வெளியானது

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான மயில்சாமியின் திடீர் மரணமானது திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் திடீரென மரணமடைந்த மயில்சாமியின் உடல் ஏன் இதுவரை பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்ற கேள்வியினை பலரும் எழுப்பி வந்துள்ளனர். இதற்கான காரணத்தினை தற்போது குறிப்பிட்டுள்ளனர். அதாவது மயில்சாமி ஏற்கனவே இதயம் சம்பந்தமான பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். 


இதனால் மாரடைப்பு ஏற்பட்டுத் தான் அவர் உயிர் பிரிந்தது என்பது தற்போது உறுதியாகி உள்ளது. இவ்வாறு மாரடைப்பால் தான் மயில்சாமி மரணமடைந்துள்ளார் என்பது உறுதியான காரணத்தினால் மட்டுமே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement