• Apr 20 2024

ஃபுல் மப்பில் அறைக்கதவை திறக்காத நடிகர் கார்த்திக்.. அவரின் மனைவி என்ன செய்தார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக்.

இவர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பதும் அதனைத் தொடர்ந்து நேரம் வந்துடுச்சு, ஆகயா கங்கை, நன்றி, மௌன ராகம், மேட்டுக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்

 இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.சில வருடங்கள் பிரேக்கில் இருந்த கார்த்திக் அனேகன், தானா சேர்ந்த கூட்டம், Mr. சந்திரமௌலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.இப்போது அவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நுழைந்து படங்கள் நடிக்கிறார்.

அந்த காலகட்டத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு play boy என்று சினிமா வட்டாரங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.ஆனால் இவரிடம் இருக்கும் பிரச்சனை படப்பிடிப்புத்தளத்திற்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார்.மதுப்பழக்கம் உள்ள கார்த்தி விடிய விடிய மது அருந்திவிட்டு பகலில் உறக்கத்திற்கு போயிடுவார்.

இதனிடையே ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது...மது அருந்திவிட்டு உறங்கிவிட்டாராம்.படப்பிடிப்பு குழுவினர் இயக்குநர் என யாரும் கூப்பிட்ட நிலையில் எவருக்கும் இவர் கதவு திறக்கவில்லை.இவ்வாறுஇருக்கையில் இவரது மனைவியை ஊட்டிக்கு வரவிழைத்தார்களாம்.அவரது மனைவி கதவை தட்டிய பின்னரே கார்த்திக் கதவை திறந்தாராம்.எனக் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement