• Apr 20 2024

42 வயது ஆண்டியை நம்பி வாழ்க்கையை இழந்த நடிகர் கரன்- கெரியரை இழந்த கதையைக் கூறிய பயில்வான் ரங்கநாதன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாள திரை உலகில் 1972 ஆம் ஆண்டு 'அச்சனும் பாப்பையும்' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கரன். இவர் இதனைத் தொடர்ந்து ராஜஹம்சம், பிரயாணம், சுவாமி ஐயப்பா ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான, கேரள ஸ்டேட் பிலிம் விருதை பெற்றார். 

 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர்'இன'என்கிற மலையாள படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இதன் பின்னர் தமிழில் தீச்சட்டி கோவிந்தன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் தமிழில் நம்மவர், என்கிற படத்திலும் கமல்ஹாசனுக்கு மாணவனாக நடித்திருந்தார்.


ஆரம்பத்தில் இவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தொட்டில் குழந்தை, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, வைகறை பூக்கள், காதல் கோட்டை, போன்ற பல படங்களில் வில்லத்தனம் கலந்த செகண்ட் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.ராஜகாளியம்மன், பன்னாரி அம்மன் போன்ற படங்களில் வில்லத்தனத்தோடு தன்னுடைய ஹீரோயிசத்தை வெளிப்படுத்தினார்.

 மேலும் இவர் நடிப்பில் வெளியான, தம்பி வெட்டேந்தி சுந்தரம், கொக்கி, கருப்ப சாமி குத்தகைக்காரர் போன்ற படங்கள், நல்ல வரவேற்பை பெற்றாராலும் கடந்த 7 வருடங்களாக சினிமாவில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.இவரின் இந்த நிலைக்கு காரணம், 42 வயது ஆண்ட்டி தான் என, கூறியுள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.


 இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது " டாப் ரேஞ்சில் கொடி கட்டி பறந்தவர் கரன்.ஒரு கட்டத்தில் 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். அந்த ஆண்டியின் கை பாவையாக மாற்றப்பட்ட கரன் தன்னுடைய சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரையே எடுக்க வைத்தார். இதனால் இப்போது தனது மொத்த கேரியும் அவர் இழந்துவிட்டார். பல வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் ஆளே அட்ரெஸ் தெரியாமல் போய் விட்டார் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அந்த ஆண்ட்ரி யாரென்று அவர் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement