• Apr 20 2024

பிரபல கோவிலில் நடிகர் ஜெயம் ரவி...தீயாய் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழகத்தின் பிரபல கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்திருக்கிறார்.மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் ரவி. இப்படத்தை இவரது மூத்த சகோதரர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். எனினும் அதனை தொடர்ந்து  எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல் ஆகிய படங்கள் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ஜெயம் ரவி. குறிப்பாக மோகன் ராஜாவின் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.


கடந்த செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் பாகம் -1 ல் அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரத்தில் ரவி நடித்திருந்தார்.அத்தோடு இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. லைகா நிறுவனம் தயாரித்து வெளிவந்த இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.


இதனை தொடர்ந்து அவர் அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அத்தோடு ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில், புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த அவர், பிரகாரத்தையும் சுற்றிவந்தார். அப்போது, கோவிலின் சார்பில் சிறப்பு பிரசாத பொருட்களும் அவருக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில் இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement