• Apr 20 2024

காவல்துறை அதிகாரியாக ஆரவ், வரலட்சுமி மிரட்டும்... 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் திரை விமர்சனம்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து ஆரவ், சந்தோஷ் பிரதாப், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, மகத், அமித் பார்கவ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் மணிகந்த் கத்ரி இசையமைத்துள்ள இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியே ஆகி இருக்கின்றது. இந்தப் படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போம்,


கதையின் கரு

அந்தவகையில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகார பலமும் பண பலமும் கொண்ட கும்பலால் மஹத் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது அமித் பார்கவ் மற்றும் சுப்பிரமணியம் சிவா என்பது வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு அப்பட்டமாகத் தெரிய வருகிறது. 

இதனால் அவர்கள் இருவரையும் உடனடியாக கொலை செய்ய வேண்டும் என திட்டம் போடுகிறார்கள். இதற்காக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டு வாங்கி செல்கிறார். 

இவர்கள் போட்ட திட்டத்தின் படி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதில் சுப்பிரமணியம் சிவா அதிரடியாக கொல்லப்படுகிறார். அதேபோல் அமித் பார்கவ் காயத்துடன் உயிருக்கு போராடுகிறார். ஆனால் அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தியது வரலட்சுமி குழு கிடையாது என்பது பின்னர் தெரிய வருகிறது.

இதனையடுத்து ஒருகட்டத்தில் அமித் பார்கவ் மற்றும் சுப்பிரமணியம் சிவா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ஆரவ் என்பதை வரலட்சுமி கண்டுபிடிக்கிறார். ஆனால் ஆரவ், இந்த குற்ற சம்பவத்திலிருந்து போலீஸாக வரும் வரலட்சுமி குழுவினரை காப்பாற்றவே அப்படி செய்ததாக தெரிவிக்கிறார். 

எனவே ஆரவ் ஏன் இவர்களை காப்பாற்ற வேண்டும்?... கொலை செய்யப்பட்டவர்களுக்கும் ஆரவிற்கும் என்ன பகை என்பதனை விரிவாக கூறுகிறது படத்தின் மீதிக்கதை.


படம் எப்படி?

அந்தவகையில் பக்காவான க்ரைம் திரில்லர் பாணியிலான ஒரு கதையை அழுத்தமில்லாத திரைக்கதையால் சுவாரசியம் குறைவாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். 

அத்தோடு மஹத் தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்து மற்ற இன்விஸ்டிகேஷன் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரொம்பவும் அதிகரிக்கவே செய்கிறது. 

அதேபோல் பாடல்கள் இந்தப் படத்திற்கு தடையாக இருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக வரலட்சுமி கொலை செய்ய திட்டமிடும் காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.  

நடிப்பு எப்படி?

பொதுவாக க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைந்த படங்களில் காட்டப்படும் நடிகர்களின் முகத்தின் உணர்வுகள் தான் படம் பார்ப்பவர்களையும் ஒருவித பதற்றத்திலேயே வைக்கும். ஆனால் இப்படத்தில் அது மிஸ் பண்ணி இருப்பது போல் தெரிகிறது.

மேலும் பின்னணி இசையால் காட்சியை எதிர்பார்த்தபடி வரவைத்திருந்தாலும் நடிப்பு என்பது குறையாகவே படுகிறது. எப்போதும் ஒரே மாதிரியாக உம்மென்று இருப்பது, விறுவிறுப்பு இல்லாத விசாரணை என பலரின் நடிப்பு அமைந்திருக்கின்றது.

தொகுப்பு 

மொத்தத்தில் இப்படத்தில் பல குறைகள் இருந்தாலும் பொறுமை இருந்தால் ஓரளவிற்கு ரசித்துப் பார்க்கலாம் என்றுதான் கூற வேண்டும். 

Advertisement

Advertisement

Advertisement