• Mar 29 2024

ராங்கி படத்தின் முதல் ஷோ பார்க்க சென்ற த்ரிஷாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- கூட்டமின்றி காத்துவாங்கிய தியேட்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் ராங்கி.

இப்படத்தினை எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சரவணன் இயக்கியிருந்தார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த நிலையில்,தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஒரு வழியாக ரிலீஸ் ஆகி உள்ளது.


இதன் காரணமாக ராங்கி படத்திற்கு அதே அளவு ஓப்பனிங் கிடைக்கும் என நினைத்து காலை 7 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது.இதற்காக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் த்ரிஷாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது. காலையில் த்ரிஷா தியேட்டருக்கு வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார் த்ரிஷா.இதையடுத்து உள்ளே படம் பார்க்க சென்றபோது தான் த்ரிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தியேட்டரில் கூட்டமே இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை பார்த்து த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.


அந்த தியேட்டரிலேயே பால்கனியின் மட்டும் தான் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. ஏனெனில் அங்கு இருந்தவர்கள அனைவரும் ராங்கி படக்குழுவினர். தன் படத்தின் முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதும் என ஆசை ஆசையாய் வந்த த்ரிஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தான் வர உள்ளது தெரிந்தும் படம் பார்க்க கூட்டம் வராதது த்ரிஷாவை அப்செட் ஆக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement