• Mar 28 2024

தீபாவுக்கு நலங்கு வைக்கச் சென்ற அபிராமிக்கு காத்திருந்த அதிர்ச்சி- கார்த்திக் எடுத்த முடிவு- கார்த்திகை தீபம் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாட்சி தீபா பாடுவதைப் பார்த்து உடனே அதை கார்த்திக்கிடம் சொல்ல வேண்டும் என்று கார்த்திகேயன் என்று கூப்பிட பின்னால் இருந்து தீபா கையெடுத்து கும்பிட்டு சொல்ல வேண்டாம் என்று கெஞ்ச அதை பார்த்த மீனாட்சி கார்த்திக்கிடம் ஒன்றுமில்லை என சமாளித்து விடுகிறாள்.

அடுத்து மீனாட்சி தீபாவிடம் குடும்ப வறுமை காரணமாக அப்பா அண்ணனுக்கு சரியான வேலை இல்லை தம்பிக்கு உடம்பு சரியில்லை, அதன் காரணமாக ராஜஸ்ரீ பணம் கொடுத்து நிறைய உதவி பண்ணாங்க இப்ப மட்டும் இந்த உண்மை வெளியே தெரிஞ்சா அந்த உதவியை நிப்பாட்டிடுவாங்க எங்க குடும்ப ரொம்ப கஷ்டப்படும் தயவுசெய்து சொல்ல வேண்டாம் என்று சொல்ல அதைக் கேட்டு மீனாட்சி உன்னை நினைக்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கவலைப்படாத கண்டிப்பா ஒரு நாள் உண்மை தெரியும் என்று சந்தோஷப்படுகிறாள்.


அடுத்து நட்சத்திராவிற்கு அபிராமி புடவையை பரிசாக கொடுக்க அதை ரூபஸ்ரீ பார்த்து புடவை திருடி விடுகிறாள்‌. அடுத்து புடவை காணாமல் போன விஷயம் தெரிந்து உடனே அனைவரிடமும் நான் கொடுத்த புடவை காணாமல் போய் விட்டது செக் செய்ய சொல்கிறாள்.உடனே கார்த்திக் மா இந்த புடவைக்காக எதுக்கு எல்லாரையும் செக் பண்ணிக்கிட்டு இருக்கணுமா? வேண்டாம்மா தயவு செய்து வேண்டாம் விட்டுடுங்க என்று சொல்ல அபிராமி அப்செட் ஆகிறாள். அடுத்து காரில் போகும்போது ரூபா ஸ்ரீயிடம் இருக்கும் புடவையை ராஜஸ்ரீ பார்த்து விடுகிறாள்.


நீ தான் எடுத்தியா என்று கேட்க ஆமா ஆசையா இருந்துச்சு அதனால தான் எடுத்துக்கிட்டேன் அப்படின்னு சொன்னவுடன் ராஜஸ்ரீ இந்த புடவை மட்டும் உன்கிட்ட இருக்குன்னு அந்த அம்மாவுக்கு தெரிஞ்சிச் என்றால் அவ்வளவுதான் நீ அந்த வீட்டுக்கு மருமகளே போக முடியாது தயவு செய்து இந்த புடவை வேண்டாம், என சொல்லி தீபாவுக்கு நலங்கு வைக்க கொடுத்து விடுகிறாள்.மறுநாள் காலை தீபாவிற்கு நலங்கு பங்க்ஷனில் தீபா ராஜஸ்ரீ கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு நலுங்கில் வந்து அமர்கிறாள். 


அப்போது அபிராமி அருணாச்சலமும் கார்த்திக்கு நலங்கு வைக்க நாள் குறிக்க வருகின்றனர்.திடீரென வண்டி ரிப்பேர் ஆகி நிற்க அது தீபாவின் வீடாக இருக்க டிரைவர் ரேடியேட்டருக்காக தண்ணி கேட்க அப்போது தர்மலிங்கம் வெளியே வந்து அபிராமியை பார்த்து தயவு செய்து வாங்க உங்க கையால எங்க பொண்ணுக்கு வந்து நலுங்கு வைங்க என்று அழைக்க மறுப்பு சொல்ல முடியாமல் அபிராமி உள்ளே வர அபிராமி தீபா காட்டியிருக்கும் புடவையை பார்த்து அதிர்ச்சியாகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை  ஷுதமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Advertisement

Advertisement

Advertisement