• Mar 29 2024

சிதம்பரத்துக்கு சவால் விடும் அமுதா-வடிவேலுவால் வந்த புது சிக்கல் -அமுதாவும் அன்னலட்சுமியும் எப்பிஷோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போட்டியில் வெற்றி பெற்ற அமுதாவிற்கு பரிசு வழங்க சிதம்பரம் அமுதாவிடம் சாமியே சொன்னாலும் நான் உன்னை ஏத்துக்க மாட்டேன் என கூறுகிறார்.

நான் ஆசையா வளர்த்த பொண்ணு என் பேச்சை கேக்காம வீட்டை விட்டுட்டு போயிட்டா, இனிமே அவ என் பொண்ணே கிடையாது என உணர்ச்சிவசப்பட்டு பேச, அமுதா கண்ணீருடன் அப்படி நான் என்ன அப்புச்சி தப்பு பண்ணிட்டேன், என்னை நீங்க மறுபடியும் அமுதா வீட்டுக்கு வான்னு உங்க வாயால சொல்ல வைப்பேன்.. அது நடக்கும் என சவால் விடுகிறாள்.


இப்படியான நிலையில் வடிவேலுக்கு கடன் கொடுத்தவன் வந்து பணத்தை கேட்டு அவனை அடிக்க வீட்டில் பிரச்சனையாகிறது, அமுதாவிடம் இருக்கும் பணத்தை பரமு, சின்னா எடுத்து குடுக்க சொல்லி நாடகமாடுகின்றனர்.ஆனால் அமுதா கொடுக்காமல் இருக்க அன்னத்திடம் பரமு சின்னா அமுதாவை பற்றி புகாராக பேசுகின்றனர். 

அப்போது அங்கு வரும் செந்தில் கடன்காரனும் சின்னாவும் சைகையில் பேசிக் கொள்வதை பார்த்து விட்டு , செந்திலும் மாணிக்கமும் அவனை வீட்டிற்கு பின்னால் அழைத்துச் சென்று அடி வெளுக்கிறான். அவன் தனக்கு பணம் தர தேவை இல்லை என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடுகிறான்.அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை அறிந்து கொள்ள அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Advertisement

Advertisement

Advertisement