• Apr 26 2024

தெருவில் சரணோடு சேர்ந்து ஜாலி பண்ணும் இனியா-பாக்கியாவுக்கு வந்த புது சிக்கல்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிற்கு குடும்ப பெண்களின் மத்தியில் அமோகமாக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் டியூஷனில் சேர்ந்திருக்கும் இனியா அங்கு சரண் என்ற நபரோடு பேசி பழகி வருகிறார்.இனியா மீது நம்பிக்கையில் இருக்கும் பாக்கியாவும் சரணை தன்னுடைய வீட்டிற்கே வரவைத்து பிரியாணி விருந்து வைத்து அனுப்புகிறார்.

 சரண் வீட்டுக்கு வந்த முதல் நாளே ஈஸ்வரியிடம் பார்ப்பதற்கு பாட்டி மாதிரி இல்லை ஆன்ட்டி மாதிரி இருக்காங்க என்று சொல்லி ஐஸ் வச்சு நன்றாக செட் ஆகிவிட்டார். இந்த நிலையில் அடுத்து இவர்களுடைய டிராக் எப்படி போகப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சரண் இனியாவிடம் காதலிப்பது போன்று தான் பேசி பழகி வருகிறார். இனியாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தட்டிக் கழித்து வருகிறார்.


இந்த நிலையில் தற்போது இனியாவாக நடிக்கும் நேகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் சரண் உடன் இனியா ரோட்டில் நிற்கும்போது சரண் இனியாவிடம் நீ நன்றாக நடிப்பாய் தானே அப்போ கண் தெரியாதவர்கள் மாதிரி நடித்துக் காட்டுறியா என்று கேட்க, அதற்கு இனியாவும் சரி என்று சொல்ல, அப்போ கண் தெரியாதவர்கள் சாப்பாடு வேண்டுமென்றால் எப்படி கேட்பார்கள் என்று கேட்க, அதற்கு சைகை மொழியில் இனியாவும் பதில் அளிக்க, 


அடுத்ததாக எனக்கு அறிவில்லை என்பதை எப்படி சொல்வாய் என்று சரண் கேட்க அதற்கும் சைகை மொழியில் இனியா பதில் சொல்ல, கடைசியில் நான் கண் தானே தெரியாது என்று சொன்னேன் வாய் பேசும் தானே ஏன் இதற்கு பதில் சொல்லவில்லை என்று கேட்க கடைசியில் இனியாவுக்கு பல்பு கிடைக்கிறது.இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. 



Advertisement

Advertisement

Advertisement