• Apr 20 2024

முல்லை கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்ட கதிர் -தனம் எடுத்த முக்கிய முடிவு-உணர்ச்சிவசமான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . இந்த சீரியல் சில மாதங்களாகவே விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து செல்கின்றது.

அதாவது கடந்த வாரம் முழுவதும் முல்லைக்கு உடல் சரியில்லாமல் போனதால் சந்தேகப்பட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்பட்டு சோதனை செய்கின்றார். அதன் போது தான் கர்ப்பமாக இருப்பதை முல்லை அறிந்து கொண்டார்.

ஆனாலும் இதுவரை யாரிடமும் சொல்லாத முல்லை தானாக வைத்தியசாலைக்கு சென்று சோதித்து பார்க்கின்றார். அப்போது டாக்டர் முல்லை இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறி விடுகின்றார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த முல்லை கதிரை வைத்தியசாலைக்கு கூட்டிட்டு வந்து மீண்டும் டாக்டர் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி விடுகின்றார். இதனால் கதிர் வீட்டிற்கு சென்று கூற அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருப்பதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement