• Apr 20 2024

எந்த ஒரு நடிகருக்கும் கிடைத்திடாத அதிர்ஷ்டம்... அதுவும் அமர்க்களத்தில் அஜித்திற்கா... ஆடிப் போன பிரபலங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமாவில் சுமார் 60 படங்களை கடந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் நடிக்க வருவதற்கு முன்பு தன்னுடைய ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்திருந்தமை நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே.


இந்த நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'ஏகே 61' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் என்பவர் இயக்கி வருகிறார். 'ஏகே 61' படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் இந்த வருடத்தின் இறுதிக்குள் தொடங்கும் என சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 



இவ்வாறாக பல படங்களில் நடித்து வருகின்ற தல அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ‘அமர்க்களம்’. இப்படத்தினை சரண் இயக்கியிருந்தார். அஜித்தின் திரை வாழ்க்கையில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். ரசிகர்களால் மட்டுமன்றி அஜித்தினாலும் மறக்க முடியாது. ஏனெனில் இந்தப்படத்தில் தான் அவர் ஷாலினியுடன் இணைந்து நடித்து அவர் மேல் காதல் கொண்டிருந்தார்.


இந்நிலையில் இப்படம் பற்றி சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படம் வெளிவந்த ஒரே நாளில் நடிகர் அஜித்துக்கு சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை இயக்குநர் சரண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.



இந்த சம்பவம் ஆனது ரசிகர்களுக்கு மட்டுமன்றி அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பலருக்கும் ஷாக் கொடுத்ததாக தகவல் தெரிவிக்கின்றன. ஏனெனில் எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் ஒரே நாளில் இத்தனை ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டமை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.


அதுமட்டுமன்றி காதல் மன்னனாக இருந்த அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது அமர்க்களம் திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.


Advertisement

Advertisement

Advertisement