• Apr 25 2024

மகிழ்ச்சியில் இருந்த ராதிகாவிற்கு பாக்கியாவால் காத்திருந்த ஆப்பு...இதை யாரும் எதிர்பார்க்கலையே ....இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

ராதிகாவிற்கும் இனியாவிற்கும் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தாத்தா பாட்டியடம் பேசுகின்றார்.

கோபி எப்படி இருக்கிறான்..? என்று பாட்டி விசாரிக்கிறா.அதற்கு அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.ஒரு நாள் இனியா புரிந்து கொண்டு இந்த வீட்டுக்கு வருவா என தாத்தா கூறுகின்றார்.

இதன் பின்னர் ராதிகா கான்டீனுக்கு வந்து சுற்றி பார்த்துக்கொண்டு இருந்து கொண்டு மனதிற்குள் ஒன்று நினைக்கிறார்.அதாவது எல்லோரும் பயந்து கொண்டு சொல்லாம கொல்லாம கான்டீன் பக்கமே வரவில்லையா என சிரித்துக்கொண்டு நினைக்க...திடீரென பாய்ந்து வருகிறார் செல்வி அக்கா.இதனால் கொஞ்சம் ஷாக்கடைந்த ராதிகாவிடம் பேசுகின்றார்.

என்ன மேடம் அப்படி பார்க்கிறீங்க..ரொம்ப நன்றி மேடம்..ஆனால் எங்க அக்கா தான் சுடிதார் போடல என கவலையாக சொல்வது போல நடிக்கின்றார்.இதன் பின் மாஸாக என்றி கொடுத்தார் பாக்கியா.

பின் உங்களால தான் நான் இப்படி ரெஸ் போட முடிந்து.நீங்க ஸ்ரிக்ட் ஆ சொன்னபடியா தான் எங்க அத்தை அக்சப்பட் பண்ணினவா...என ராதிகாவை கடுப்பேத்தும் விதமாக பாக்கியா பேசுகின்றார்.

இதன் பின் அதே சுடிதாரில் ஆங்கிலம் படிக்கும் இடத்திற்கு செல்ல எல்லோரும் பாக்கியாவை நல்ல இருக்கு..நம்பவே முடியல..என புகழ்ந்து தள்ளுகின்றனர்.பின்வீட்டில் பார்ட்டி இருக்கு வாங்க என எல்லோரையும் அழைக்கின்றார் பாக்கியா.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement