• Apr 20 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பேய்-அலறி அடித்து ஓடிய போட்டியார்கள்-கமல் கூறியது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கடந்த சில தினங்கள் முழுக்க முழுக்க கலவரமாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.பொம்மை டாஸ்க் என்ற ஒன்றின் காரணமாக, முழுக்க முழுக்க சண்டைகளும் சச்சரவுகளும் தான் அங்கே அரங்கேறி இருந்தது.

அணியாக பிரிந்து பொம்மை டாஸ்க் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில், போட்டியாளர் ஷெரின் நெரிசலில் சிக்கி கீழே விழுந்து காயமும் அடைந்ததாக தெரிகிறது.

அப்போதில் இருந்து பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்திருந்த நிலையில், ஒரு சாரார் தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டார் என்றும், மற்ற சிலர், தனலட்சுமி அதற்கு காரணமில்லை என்றும் வாதாடி வந்தனர். இப்படியாக கலவர பூமியாக பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்க, பொம்மை டாஸ்க் முடிவடைந்த பின்னர், ஓரளவுக்கு கலகலப்பாகவும் பிக்பாஸ் வீடு மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, Worst Performer என அறிவிக்கப்பட்ட அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் சிறைக்கு செலவும் பிக்பாஸ் தெரிவித்து இருந்தார். இவ்வாறுஇருக்கையில், Ghost Prank என்கிற பெயரில் அமுதவாணன் செய்த பிராங்க்கும் இதனால் தனலட்சுமிக்கு ஏற்பட்ட சம்பவமும் கடும் பரபரப்பைஏற்படுத்தி இருந்தது.

அத்தோடு பேய் போல சக போட்டியாளர்களை இரவு நேரத்தில் அமுதவாணன் பயமுறுத்தி பிராங்க் செய்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில், தனலட்சுமி கடுமையாக பயந்து போய் வாசலில் போய் கதறி அழுகின்றார்.இதனைத் தொடர்ந்து, Prank என்று கூறி அவரை அமுதவாணன், மகேஸ்வரி உள்ளிட்ட பல போட்டியாளர்கள், தனலட்சுமியின் பயத்தை போக்க முயற்சி செய்தனர்.

ஆனாலும் கட்டிப்பிடித்து அழுதபடி இருந்த தனலட்சுமி, திருநீறு பூசியபடி பிக்பாஸ் வீட்டின் கதவுக்கு அருகே ஓடி உள்ளார். அத்தோடு, இனி அங்கே வரமாட்டேன் என்றும் பயத்தில் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன் செய்த பேய் பிராங்க் குறித்து பேசிய நடிகர் கமலஹாசன், "ஒரு விஷயத்தை நம்ப வைப்பது என்பது மிகப்பெரிய ஒன்று. அவர் செய்த விஷயத்தில் முக்கியமானது அதுதான். இதில் சிவின் கணேசன் லைட்டாக எரிச்சல் ஆகி இருப்பார் என்று நம்புகிறேன். ஆனால் தனலட்சுமி செய்தது தான் அல்டிமேட். மேலும் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு பயத்தில் ஓட முயற்சித்தார். அவ்வளவு தூரம் ஓடியவர் கதவிடம் சென்று தடுமாறினார்.

ஆனால் அந்தக் கதவு இழுப்பது போன்ற கதவுமல்ல. தள்ளுவது போன்ற கதவுமல்ல. அது ஒரு ஸ்லைடிங் டோர். அதாவது பக்கவாட்டில் தள்ளப்படக்கூடிய கதவு. பயத்துல அப்படி ஒரு மூன்றாவது ஆப்ஷன் இருப்பதையே தனலட்சுமி மறந்து விட்டார்" என்று கமல் கலாய்த்தபடி விழுந்து விழுந்து சிரிக்க, இதைக் கேட்ட தனலட்சுமி, "இப்படி பங்கம் பண்ணி விட்டாரே" என்று தான் செய்த செயலை நினைத்து வெடித்து சிரிக்கிறார்‌. அத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் கலகலவென்று சிரித்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் கலகலப்பான சிரிப்பு சத்தம் இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement