• Apr 25 2024

தங்க சிலை சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்... தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. 

 இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.



இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். அத்தோடு இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சமூகவலைத்தளத்தில்  அறிவித்து இருந்தார்கள்.

இதன் பிறகு தனது கெரியரில் அதிகம் ஈடுபாட்டை காட்டி வந்த சமந்தா நடிப்பில் இறுதியாக சகுந்தலம் படம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு சந்தீப் எனும் ரசிகர் ஆந்திராவில் கோவில் கட்டியுள்ளார் எனும் செய்தி தீயாய் பரவி வருகின்றது.



இதுகுறித்து அவர், சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் ஆந்திராவில் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன்.


தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது என்றார்.தற்போது அதன் புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement