• Mar 29 2024

வடக்கன்’ படம் மூலம் இயக்குநராகும் பிரபல திரைப்பட எழுத்தாளர்..!- சீரியலுக்கும் எழுதி இருக்கிறாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

எம்டன் மகன்', 'வெண்ணிலா கபடி குழு,நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.இவர் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் வடக்கன்.இப்படத்தின் மூலமே இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இதில்  இயக்குநர் சுசீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.படத்தின் இயக்குநர் பாஸ்கர் சக்தி கூறுகையில், "எழுத்தாளனாக எனது பணியை தொடங்ங்கினேன், பின்பு பத்திரிகையாளனாக, அதன் பிறகு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக, திரைப்படங்களின் வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளேன்.


 தற்போது முதல்முறையாக ஒரு இயக்குநராக 'வடக்கன்' மூலமாக எனது திரைப் பயணத்தை தொடர்கிறேன். எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி.


இருபது வருடங்களாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்த கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியான வைரமாலா தேனி மண்ணின் மணம் சார்ந்த பெண் ஆவார், அவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு. இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தை இந்த படம் பேசுகிறது. படம் சிறப்பாக உருவாகி மிகுந்த வரவேற்பை பெறும் என்று கதையின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் படத்தை தொடங்கியிருக்கிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement