• Mar 28 2024

42 வயது ஆகியும் இன்னும் திருமணம் கூடி ஆகவில்லை... நொந்து நூலாகிப் போயுள்ள பிரபல நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவர் அதிகளவில் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராக மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.


பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற இவர் 'மங்கத்தா, பிரியாணி, மாநாடு' போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய 'மன்மதலீலை' என்ற படத்திற்கும் இவர்தான் இசையமைத்து கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது சிவகார்த்திகேயனின் 'எஸ் கே 20' படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்து வருகிறாராம் பிரேம்ஜி.


இவ்வாறாக படங்களில் பிஸியாக இருந்து 42 வயதை எட்டிய பிரம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல கோவில் சினிமா என்று தன்னுடைய வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

அத்தோடு இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளுவிட்டு வருகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் என்று அவருக்கு அறிவுரை கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரேம்ஜி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருக்கின்றார். அதாவது குண்டாக கொழு கொழு என்று காணப்பட்ட பிரேம்ஜி தற்போது படுஒல்லியாக யாரென்றே கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மாறியிருக்கிறார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் "திருமணம் ஆகவில்லை என்ற கவலையில் இப்படி ஆகிவிட்டாரா அல்லது ஒருவேளை திருமணத்திற்கு தான் இப்படி உடலை குறைத்திருக்கிறாரா தெரியவில்லை" என்று கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement