• Apr 20 2024

குழந்தைக்குத் தந்தையாக விரும்பும்... 50வயதான திருமணமாகாத பிரபல நடிகர்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சல்மான் கான். இவர்  நடித்த 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியொன்றில் சல்மான் கான் கூறிய விடயமானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


அதாவது பொதுவாகவே சல்மான் கான் குழந்தைகள் மீது தீராத அன்பு கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் தனது மருமகன்கள் மற்றும் மருமகள்களுடன் நேரம் செலவிடுவதில் விருப்பம் உள்ளவர். இருந்தாலும் 50 வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமலே இவர் இருந்து வருகின்றார். அது ஏன்? என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.


இதற்குப் பதிலளிக்கும் வகையில் அந்த பேட்டியில் அவர் கூறுகையில் "என்னவென்று கூறுவது. திட்டம் ஒன்று உள்ளது. ஆனால், வீட்டுக்கு மருமகள் வரவேண்டும் என்பதற்காக அது இல்லை. ஒரு குழந்தை வரவேண்டும் என்பதற்கான திட்டமது. ஆனால், இந்திய சட்டங்களின்படி அது சாத்தியம் இல்லை. அதனால், என்ன செய்ய வேண்டும் என நாங்கள் பார்க்க இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது "பாலிவுட்டில் கரண் ஜோகர், துஷார் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள், நடிகர்கள் என துணையில்லாமல் தந்தைகளாக உள்ளனர். அவர்கள் அனைவருமே ஒற்றை பெற்றோராக இருந்தபடி குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். இதேபோன்று நடிகை சுஷ்மிதா சென் உள்பட பாலிவுட் நடிகைகள் ஒற்றை பெற்றோராக குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்" எனவும் கூறியுள்ளார்.


அத்தோடு "2 குழந்தைகளுக்கு கரண் தந்தையாக இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான், அதற்கான முயற்சியிலேயே நான் ஈடுபட்டேன். ஆனால், அந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. அது எனது திட்டத்திற்கு தடையாக அமைந்து விட்டது. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். ஆனால், குழந்தைகள் வரும்போது, பின்னர் அவர்களது தாயார்களும் கூட வருவார்கள். அவர்களுக்கு ஒரு தாய் இருப்பது நல்லதுதான். ஆனால், வீட்டில் எங்களிடம் நிறைய தாய்மார்கள் உள்ளனர். ஒட்டுமொத்த மாவட்டமும் எங்களிடம் உள்ளது. ஒட்டுமொத்த கிராமமும் எங்களிடம் இருக்கிறது. அவர்கள் குழந்தைகளை கவனித்து கொள்வார்கள். ஆனால், எனது குழந்தையின் உண்மையான தாய், எனது மனைவியாகவும் இருப்பார்" எனவும் சல்மான் கான் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement