தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் தான் வடிவேலு. இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படத்தினை இயக்குநர் சிம்பு தேவன் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் தான் வடிவுலு முதல் முறையாக கதாநாயகனாக நடித்திருந்தார். அதுவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்ததால் இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வடிவேலுவை வைத்து இயக்க சிம்புதேவன் திட்டமிட்டு இருந்தார்
ஆனால் பாகம் 2 இன் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடிவேலு உடன் அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த படம் நிறுத்தப்பட்டது . எனவே தற்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க சிம்பு தேவன் முடிவெடுத்துள்ளாராம்.
இந்த படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
Listen News!