• Apr 24 2024

நான் செத்திட்டேன் என்று தான் 10 வருஷமா எங்க வீட்டில நினைச்சாங்க- நடிகை சுமதியின் மனதை உருக்கும் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்து அசத்துபவர் தான் சுமதி. இவர் வடிவேலு நடித்த பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸியமான சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது எனக்கு கல்யாணம் ஆகி எல்லோரும் போல தான் இருந்தேன். ஆனால் என்னோட வீட்டுக்காரர் ரொம்ப குடிச்சிட்டு தொல்லை தந்திட்டே இருந்தாரு. நான் எங்க வீட்டை சொன்னேன் இதை யாருமே கேட்டுக்கிற மாதிரி இல்லை. அதனால வீட்டை விட்டே வெளிக்கிட்டு வந்திட்டேன்.

அப்பிறம் ஒரு வீட்டில தங்கியிருந்து வீட்டு வேலைக்கு போயிட்டு இருக்கும் போது என்னோட வீட்டுக்கு கீழே இருந்தவர் தான் இப்படி சினிமாவில் நடிக்கலாம் தானே என்று கூறினாரு பயந்து போய் தான் அவர் சொன்னதைக் கேட்டு ஆடிஷன் போனேன். அதன்படி சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சிச்சு. அதனால் சீரியலில் தான் முதலில் நடித்தேன்.


அதுக்கப்பிறம் தான் படவாய்ப்புக் கிடைச்சிச்சு. தொடர்ந்து பேசிய அவர் நான் வீட்டை விட்டு வெளியில் வந்ததால எங்க வீட்டில இருக்கிறவங்க நான் இறந்திட்டேன் என்று தான் நினைச்சாங்க. அப்பிறம் நான் படங்களில் சீரியலில் வருவதைப் பார்த்து தான் நான் உயிரோட இருக்கிறேன் என்றே நினைச்சாங்க.

என்னோட பிள்ளைகள் கூட நான் 10 வருஷமாக கதைக்கல. இப்போ தான்என்கிட்ட எல்லாருமே பேசிறாங்க பழகிறாங்க. நான் இப்போ முதல் இருந்ததை விட ஓகேயாகத் தான் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வடிவேலு சேரோட ஒரு படத்தில நடிக்கும் போது அவருக்கு அடிக்கணும். அப்போ நான் சும்மா தட்டினேன். ஆனால் அவர் இல்லம்மா நீங்க இறுக்கி அடிக்கணும் அதை ரியலா பண்ணுங்க என்று சொன்னாரு அதை மாதிரியே பண்ணினேன் எதுவுமே என்னைத் திட்டல எனக்கே ஆச்சரியமாத் தான் இருந்திச்சு. இப்போ என்னை நேர்ல பார்த்தால் கூட எனக்கு ஒரு படவாய்ப்பு வாங்கித் தருவாரு என்றும் அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement